நாடு திரும்பிய பெண் விமானத்தில் மரணம்!
Saturday, April 8th, 2017
இலங்கை நோக்கி வந்த விமானத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (07) அதிகாலை 4.50 இற்கு குவைத்திலிருந்து இலங்கை வந்த விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், குறித்த பெண் மரணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் எனவும், இவர், வீட்டு பணிப் பெண்ணாக வெளிநாடு சென்று நாடு திரும்பிய வேளையிலே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த பெண்ணின் கணவரும் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விற்பனை விலையில் மாற்றம் செய்வது தொடர்பில் கூறப்படவில்லை - மாகாண சபையின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு !
நாட்டில் டயர்களுக்கு தட்டுப்பாடு – இறக்குமதி தடையே காரணம் என தகவல்!
கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்!
|
|
|


