குற்றங்களைக் கட்டுப்படுத்த தனி பொலிஸ் பிரிவு!
Thursday, April 6th, 2017
இலங்கையில் குழுக்களாக இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைத் தடுக்க விஷேட பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் எந்தவொரு இடத்தில் இடம்பெறும் திட்டமிட்ட குற்றம் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தின் கீழ் இந்த புதிய பொலிஸ் பிரிவானது பொலிஸ் கட்டளைச் சட்டதின் கீழ் உருவாக்கப்ப்ட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய, அவரது நேரடி கட்டுப்பாட்டில் மேல் மாகாணம், குற்ற மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முணசிங்கவின் கண்காணிப்பின் கீழ் இந்த பொலிஸ் பிரிவு இயங்கவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
Related posts:
யாழ். கொக்குவிலில் வாள்வெட்டுக் குழு அட்டாகாசம்: சீ .சீ. ரி.விக் கமராவின் உதவியுடன் விசாரணை தீவிரம்
நாளைஇலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் மோடியின் விஜயம் தொடர்பில் விசேட கலந்துரை...
ஜனாதிபதித் தேர்தல் - விசேட தினமாக எதிர்வரும் 14 ஆம் திகதி அறிவிப்பு!
|
|
|


