மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க திட்டம்!
Monday, April 3rd, 2017
இலங்கை அரசாங்கமும் இந்திய நிறுவனமொன்றும் இணைந்து மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனத்துடனான கூட்டு செயற்பாடு வெற்றியளித்தால் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.
Related posts:
சமூகவலைத்தள பிரதானிகள் இலங்கை வருகை!
சரணாலய வருமானம் அதிகரிப்பு!
கொவிட் நிதி வேறு எதற்கும் பயன்படுத்தமாட்டாது – அமைச்சர் நாமல் உறுதி!
|
|
|


