சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவருக்கு அபராதம்!
Thursday, March 16th, 2017
யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற மூவருக்குத் தலா- 10 ஆயிரம் ரூபா அபராதம் மல்லாகம் நீதவான் ஏ.யூட்சனால் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த -03 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும், அச்சுவேலிப் பொலிஸாரும் இணைந்து நடாத்திய திடீர்ச் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது சட்ட விரோத மின்சாரப் பாவனையாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேகநபர்களுக்கு எதிராக இன்றைய தினம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே நீதவான் மேற்கண்டவாறு அபராதத் தொகையைச் செலுத்துமாறு உத்தரவிட்டார். அத்துடன் மின்சார சபை கோரும் நஸ்ட ஈட்டுத் தொகையை வழங்குமாறும் அவர் உத்தரவிட்டா
Related posts:
புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களில் 56 பேர் பலி
பேருந்து சாரதி மீது பயணியொருவர் தாக்குதல்!
இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இராஜதந்திர சந்திப்புகளிலும...
|
|
|


