இலங்கைக்கு இந்தோனேஷியா உதவி!
Friday, February 24th, 2017
இலங்கையில் பலபிரதேசங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு மக்களுக்காக 5 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசியினை நிவாரணமாக வழங்க இந்தோனேஷியா அரசாங்கம் உடன்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தோனேஷிய வௌவிவகார பிரதி அமைச்சர் எ.எம்.பஷீர் இடையில் நேற்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. ஐனாதிபதி காரியாலயத்திலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி ,
இந்தோனேஷியா அரசால் இந்நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கவுள்ள உதவி தொடர்பில் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். மேலும் ,இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோவிடோடா , அந்நாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்துள்ளதாக இதன்போது கருத்து தெரிவித்த இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.
Related posts:
இலங்கையர்கள் இணையத்தின் மூலம் பிரித்தானியா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்!
மீண்டும் பொலிஸ் ஊடகப் பிரிவு ஆரம்பம்!
சீனாவில் நடைபெறும் 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டியின் இலங்கை அணி தலைமை அதிகாரியாக ராஜச...
|
|
|


