சட்டத்தரணிகள் சம்மேளன தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது
Tuesday, February 21st, 2017
நாளை நடைபெறவிருந்த இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளன தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
ராமநாதன் கண்ணன் என்பவருக்கு மேல்நீதிமன்ற நீதிபதி பதவி வழங்கப்பட்டமை தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதவி நிலைக்கு சட்டத்தரணிகள் சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது. எனினும் நீதிபதிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவர்கள், நாளைய தேர்தலை புறக்கணித்துள்ளனர். நீதிபதிகள் பங்கேற்காதநிலையிலேயே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

Related posts:
இளம் வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை மரபணு பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு!
சிறையில் உரிய மருத்துவ பரிசோதனைகள் இல்லை - விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என தமிழ் அரசியல் கைதிகள்...
மார்ச் மாதம் இரசாயன உரத்தை விநியோகிக்க முடியும் - உர இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
|
|
|


