க.பொ.த. (சா/த) பரீட்சை அறிவுறுத்தல் கூட்டம்!
Thursday, November 24th, 2016
க.பொ.த. (சா/த) பரீட்சையில் கடமையாற்றும் இணைப்பு நிலை அலுவலர்கள், உதவி இணைப்பு நிலைய அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி மேற்பார்வையாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் யா.வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் கோப்பாய் கோட்டம் தவிர்ந்த யாழ்ப்பாண வலயம், தீவக வலயம், தென்மராட்சி வலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட அலுவலர்கள் அனைவரும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டால் மாத்திரமே பரீட்சைக் கடமைகளில் கடமையாற்ற முடியும் என்பதனால் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Related posts:
14 இந்திய மீனவர்கள் கைது!
வெலிசறை கடற்படை சிப்பாய் ஒருவரால் முல்லைத்தீவில் 71 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர் - முல்லைத்தீ...
இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் - விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர் மஹிந்த ரா...
|
|
|


