காணாமல் போன மலேசிய படகு: 25 சீன குடிமக்கள் உயிருடன் மீட்பு!
Monday, January 30th, 2017
காணாமல் போன மலேசிய படகு இருந்த 25 சீன குடிமக்களை உயிருடன் கண்டுபிடித்துள்ளதாக மலேசியாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதில் இன்னும் 6 பேர் காணாமல் போயுள்ளதாக மலேசியா அரசின் அமைச்சர் டடூக் பங் யூக் மிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவின் பிரபல சுற்றுலா தீவு ஒன்றுக்கு செல்லும் வழியில் போர்னியோவின் கடற்கரைக்கு அப்பால் படகு காணாமல் போனது.
மலேசியாவின் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் கடல் பகுதியில் பெரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.மீட்பு நடவடிக்கைகளுக்கு, சீரற்ற கடுமையான வானிலை பெரும் தடையாக அமைந்துள்ளன.

Related posts:
சொந்த மக்கள் மீது இரசாயண ஆயுதங்கள் பிரயோகித்ததாக சூடான் அரசு மீது அம்னெஸ்டி குற்றச்சாட்டு!
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - விளாடிமிர் புதின்!
படகு மூழ்கியதில் 58 பேர் பலி – மொரிடேனியாவில் பரிதாபம்!
|
|
|


