குடாநாட்டில் மழை…! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
Saturday, January 21st, 2017
யாழ்ப்பாணக் குடாநாட்டின் அனேக பகுதிகளில் நேற்று தொடக்கம் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. நேற்று. முற்பகல் 11 மணியளவில் மிதமான மழை வீழ்ச்சியுடன் ஆரம்பித்த மழை மாலை வேளையில் பல பகுதிகளில் அதிகமாக பெய்ததுடன் இன்று (21) காலையும் தொடர்ந்து பெய்துவருகின்றது.
சில பகுதிகளில் மழையுடன் பலத்த காற்றும் வீசியுள்ளது. இதனால், மழையின்மையால் ஏக்கத்துடன் வாடிய விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குடா நாட்டில் வரட்சி காரணமாக ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில தினங்களுக்கு வடக்கில் மழை பெய்யும் என வளிமண்டலத் திணைக்களம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Related posts:
சுகாதார அமைச்சருக்கு கல்வியின் தரம் பற்றிய பொறுப்பில்லை - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
வெளிநாடுகளுக்குச் சென்ற 30 விசேட வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் - கோப் குழுக் கூட்டத்தில் தெரிவிப...
யாழ் மத்திய தபால் நிலையத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பிரிவு - எதிர்வர...
|
|
|


