எதிர்வீட்டாரின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலி!
Thursday, January 12th, 2017
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவமானது இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வழியிலுள்ள வீட்டில் வசிக்கும் 25 வயதான பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் எதிர்வீட்டில் வசித்து வந்தவர்கள் தாக்கியதாலேயே குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:
வடக்கிலுள்ள 249 பாடசாலைகளுக்கு விரைவில் ஆய்வு கூட உபகரணங்கள்!
மது போதையில் வாகனம் செலுத்திய 6136 சாரதிகள் கைது!
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 2000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு - நீர் ...
|
|
|
தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீளவும் துரிதப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவ...
இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் திட்டத்தின் ஓராண்டு நிறைவினை முன்னிட்டு விசேட வேலைத்திட்டம் - பிரதமர...
5 நாட்களும் பணிக்கு சமுகமளிப்பது அவசிமற்றது - அரச சேவையாளர்கள் மேலதிக நேரத்தை பயனுடையதாக்கும் வகையி...


