உயர் அதிகாரிகளின் ஐரோப்பிய உடையில் மாற்றம் – ஜனாதிபதி!
Tuesday, January 10th, 2017
அரச உயர் அதிகாரிகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய உடை தொடர்பான சுற்றறிக்கையை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் , எதிர்காலத்தில் அத்தியாவசிய சந்தர்ப்பங்களை தவிர மற்றைய சந்தர்ப்பங்களில் ‘டை’ மற்றும் ‘கோட்’ அணிவது கட்டாயம் இல்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
யாழ்ப்பாணத்திலும் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை - நோயாளர்கள் பிரிவுகள் செயலிழப்பு – நோயாளர்கள் அவதி!
உணவு நெருக்கடி அடுத்த வருடமும் நீடிக்கும் - உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய ...
3000 கார்களுடன் தீப்பிடித்த கப்பல் - ஒரு வாரமாகியும் அணையாத தீ!
|
|
|


