கடலில் காணாமல்போன இரு மீனவர்கள் மாலைதீவு கடற்படையினரால் மீட்பு!
Thursday, January 5th, 2017
இலங்கையில் காணாமல் போயிருந்த மீனவர் இருவர் நேற்று மாலைதீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் என அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகாளர் சங்க தலைவர் எம்.எஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.
கல்முனையிலிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆறு பேர் காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில் குறித்த ஆறு பேரில் இருவர் நேற்று மாலை மாலைதீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். ஹாஜா மொஹைதீன், முஹமட் அர்ஜீல் ஆகியோர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகாளர் சங்க தலைவர் எம்.எஸ் நஸீர் தெரிவித்தார்.

Related posts:
60,000 இளைஞர்களை கொன்று குவித்தவரின் மகனே சஜித் - சபையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!
இலங்கையில் அணுசக்தியை நிறுவுவது பொருத்தமற்றதாம் - ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் உட்பட பல அமைப்புக்கள...
மக்கள் பிரதிநிதிகளின் சொத்து விவகாரம் - தனியுரிமையைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கா...
|
|
|


