ஊழல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள புதிய நீதிபதிகள் குழு!
Wednesday, January 4th, 2017
குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் புதிய நீதிபதிகள் குழு நியமிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யோசனை அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் அமுனுகமவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பிரதமர் யாழிற்கு விஜயம்!
சீன எல்லையை மூடியது மொங்கோலியா!
கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்!
|
|
|


