கரும்புச் செய்கைக்கான இடம் தெரிவாகவில்லை- முல்லை மாவட்ட செயலாளர் தெரிவிப்பு!
Monday, January 2nd, 2017
முல்லைத்தீவில் கரும்புச் செய்கையை மேற்கொள்வதற்காக இதுவரை எந்த இடமும் தெரிவு செய்யப்படவில்லை என்று மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5ஆயிரம் ஹெக்ரெயர் நிலத்தில் கரும்புச்செய்கை மேற்கொள்ளப்பட்டவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான இடம் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் இடங்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாகா ஒதுக்கீடு செய்யப்படும். என்றார்

Related posts:
கொழும்பு துறைமுக உணவகத்தில் தீ!
மோசடி செய்த உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றம்!
சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ தரச் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்!
|
|
|


