பெரும்போக நெற்செய்கை விவசாயிகளுக்கு 7000 மில்லியன் ரூபா நிதி!
Wednesday, December 21st, 2016
பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க 7000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்முறை பெரும்போக நெற்செய்கையை மேற்கொள்ள திறைசேரி ஐயாயிரத்து 500 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியை கமத்தொழில் அமைச்சுக்கு வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படும். இதற்கு மேலதிகமாக இன்றும் ஆயிரத்து 500 மில்லியன் ரூபா வழங்கப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
விவசாயி ஒருவருக்கு ஒரு ஹெக்டெயர் விஸ்தீரனமான நிலப்பரப்பிற்குரிய உரத்தை கொள்வனவு செய்ய 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும். குறித்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த நிதியினை கமத்தொழில் அமைச்சு வைப்புச் செய்யும்.

Related posts:
தேர்தல் பிற்போவதற்கான பொறுப்பை பசில் ஏற்க வேண்டும் - அமைச்சர் பைசர்!
ஊரடங்கு தொடர்பில் இந்தவாரம் முக்கிய தீர்மானம் - இராணுவத் தளபதி அறிவிப்பு!
சீரற்ற காலநிலை - நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இடைநிறுத்தம்!….
|
|
|


