டெங்கு பரவும் சூழல்: நால்வருக்கு அபராதம்!

Tuesday, December 20th, 2016

டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த நால்வருக்கு தலா இரண்டாயிரம் ரூபா மல்லாகம் நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரனால் அபராதமாக விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய், சுதுமலை, ஆனைக் கோட்டை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பரிசோதனை நடவடிக்கையில் டெங்கு பரவக் கூடிய நிலையில் சூழலை வைத்திருந்த நால்வருக்கு எதிராக மானிப்பாய்ப் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நால்வருக்கும் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

dengu_1

Related posts:


இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூ...
அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்டுபிடிப்பதற்காக இன்றுமுதல் விசேட நடவடிக்கை - தேசிய போக்குவரத...
அரசின் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்  பொய் கூறுகின்றார் -  தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர்!