அரசின் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் பொய் கூறுகின்றார் – தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர்!
Wednesday, July 15th, 2026
…..
நெல் கொள்வனவு திட்டத்தில் முறையான வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் வெளியிடும் தரவுகள் பொய்யானவை என்றும் தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அநுராத தென்னக்கோன் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய களஞ்சியசாலைகள் திறக்கப்படவில்லை எனவும், முறையான கேள்வி மனு கோரல் செயல்முறையுமின்றி ஒரு சில அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மட்டும் சாதகமாகச் செயற்படுவது விவசாயிகளைப் பாதிப்படையச் செய்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடலற்ற செயற்பாடுகள் மற்றும் விவசாயிகளைத் தவறாக வழிநடத்தும் போக்குகளுக்கு அவர் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
000
Related posts:
விபத்தில் காயமடைந்த ஆசிரியை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்!
QR முறைமையாக மாற்றப்படும் பயணச்சீட்டுகள் - டிஜிட்டல் மயமாகும் போக்குவரத்து துறை - அமைச்சர் பந்துல கு...
மின்சார சபையில் குவியும் கோடிக்கணக்கான பணம் – மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் பரிதவிக்கும் மக்கள்!
|
|
|


