தங்க விருதை வென்றது இலங்கை விமானப்படை!
Friday, December 16th, 2016
201ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் தங்கவிருதினை இலங்கை விமானப்படை பெற்றுக்கொண்டுள்ளது.
பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய உற்பத்தித்திறன்களுக்கான செயலகத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் விருது வழங்கும் விழா இரத்மலானை ஸ்டைன் மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை அதிகாரிகளின் பிரதானி எயர் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் ஜனாதிபதியிடமிருந்து வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் விமானப்படையின் பல நிலையங்கள் மற்றும் அமைப்புக்கள் என்பன பொறியியல், பயிற்சிகள், ஆய்வும் அபிவிருத்தியும் மற்றும் நலன்புரிசேவைகள் உள்ளடங்கலான பல துறைகளில் உற்பத்தித்திறன் தொடர்பான மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாக இலங்கை விமானப்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:
இணையம் ஊடாக பல்கலைக்கு விண்ணப்பிக்க புதிய வசதி!
நாளை வடக்கை முடக்கும் மின்சாரம்!
சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றுங்கள் - தவறின் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும் என சுகாதாரத்த...
|
|
|


