வொக்ஸ்வெகன் கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
Monday, December 5th, 2016
இலங்கையில் வொக்ஸ்வெகன் கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி குளியாப்பிட்டியவில் நாட்டிவைக்கப்படும் என கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்..
இதுதொடாபாக அமைச்சர் மேலும் தெரிக்கையில்:
தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பெரும எண்ணிக்கையிலான தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளன. கார் உற்பத்தித் துறையில் அனுபவம் மிக்க இளைஞர்களுக்கு இது ஓர் சிறந்த சந்தர்ப்பமாகும். உயர்ந்த வருமானத்தைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இது துணைபுரியும். வாகன தயாரிப்புத் துறையில் ஈடுபடும் பல இளைஞர்கள் வெளிநாடு செல்லும் எண்ணிக்கை அதிகம் என அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது குறிப்பிட்டார்.

Related posts:
உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடக்கூடிய சூழல் ஏற்படும் - கல்வியமைச்சர் !
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை துரிதமாக வெளியிட நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்ப...
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை!
|
|
|


