மலேசியாவில் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர்கள் கைது!
Sunday, November 27th, 2016
கோலாலம்பூர் பொலிஸாரால் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஆட்கடத்தலுடன் தொடர்புடைய சில இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது..
குறித்த சுற்றிவளைப்புகளின் போது இலங்கையர்கள் இந்தியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட தருணத்தில் சந்தேகநபர்கள் தடுத்துவைத்திருந்த 35 பேரையும் கோலாலம்பூர் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அவர்களை வர்த்தக நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மலேசியாவுக்கு அழைத்துச் சென்று அங்கு தொழில்வாய்ப்பை வழங்கவில்லை என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை, அவர்களை நீண்ட காலமாக மலேசியாவில் தடுத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

Related posts:
சென்னை - யாழ்ப்பாணம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கப்படும் - இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ர...
நல்லூர் மகோற்சவ காலத்தில் தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டு...
பிரான்ஸில் சிறிய ரக விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்து - மூவர் உயிரிழப்பு!
|
|
|


