சிகரெட் விற்பனைக்கு புதிய சட்டம்!
Thursday, November 24th, 2016
சிகரெட்டை தனித்தனியாக பிரித்து விற்பதை தடை செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமைய முழுமையான சிகரேட் பக்கெற்றுக்களை மட்டுமே விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளது.
சிகரெட் பாவனையை மக்கள் தவிர்த்துக் கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளிலம் இதற்குச் சமனான சட்டங்கள் காணப்படுகின்றன எனச் சுகததார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை விரைவில் வெள்ளை சிகரெட்டுக்களை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:
பேருந்தில் அத்துமீறி நுழைந்து பணம் பறிப்பு!
யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் குறைவடைந்த டெங்கு நோயின் தாக்கம்!
எமது அரசே தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கியது என்ற வரலாற்றுப் பதிவை இந்த ஆட்சியில் நாம் ஏற்படுத்துவோ...
|
|
|


