மனிதாபிமான ரீதியில் அவதானம் செலுத்துங்கள் – நீதி அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Thursday, November 24th, 2016

யாழ்ப்பாணம், குருநகர், பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள நீதி அமைச்சுக்கு சொந்தமான காணிகளில் வாழும் மக்களது காணி பிரச்சினை தொடர்பில் நீதியமைச்சர் அவர்கள் மனிதாபிமான ரீதியில் அவதானம்  செலுத்தி அம்மக்களின் தற்போதைய நிலையினைக் கருத்திற்கொண்டு அக்காணியை குறித்த மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கையெடுத்து உதவுமாறும்  கேட்டுக்கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில்  கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –

யாழ்ப்பாணம், குருநகர், பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள 5ஆம் வட்டம், ஜே/67ஆம் இலக்க கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள காணியில் 1985ஆம் ஆண்டிலிருந்து சுமார் 68க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் 1991ஆம் ஆண்டு முதல் அரச நில வரிப்பணம் செலுத்தி வருவதாகவும்  கூறுகின்றனர்.

யுத்தம் காரணமாக 1992ஆம் ஆண்டு இடம்பெயர்ந்துள்ள இம்மக்கள்  2009ஆம் ஆண்டு மீண்டும் அதே காணியில் மீள் குடியேறி தங்களது பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தங்களது வசதிக்கு ஏற்றவகையில் சேதமாகிப் போயிருந்த இருப்பிடங்களை மீளப் புனரமைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தக் காணி நீதி அமைச்சுக்குரியது என்று கூறுப்பட்டு அம்மக்களை அங்கிருந்து  வெளியேறுமாறு கோரப்பட்டு வருவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே  இவ்விடயம் தொடர்பில் கௌரவ நீதியமைச்சர் அவர்கள் மனிதாபிமான ரீதியில் அவதானம்  செலுத்தி அம்மக்களின் தற்போதைய நிலையினைக் கருத்திற்கொண்டு அக்காணியை அம்மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கையெடுத்து உதவுமாறும்  கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் நீதிமன்றத்திற்கான தேவைகள் ஏற்படும்போது அதற்குப் பொருத்தமான அரச காணியை இனங்காட்ட இயலும் என்பதையும் இங்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

03

Related posts:

கல்வி, சுகாதாரம், காலச்சா ரங்களை பாதுகாத்து வளர்த்தெ டுப்பதில் ஒவ்வொ ருவரும் அதிக அக்கறை செலுத்தவேண்...
உணர்வுகளைப் பரிமாறிக்கொ ள்ளும் சூழலை ஏற்படுத்து வதாகவே பல்கலைக்கழகங்களின் நிர்வாக கட்டமைப்புக்கள் உர...
கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறான நிலைபாட்டில் இருந்தார் என்பது முக்கியமல்ல – சாதித்துக்...

முல்லைத்தீவில் தொடரும் மர்மக் காய்ச்சல் தொடர்பில் தடுப்பு ஏற்பாடுகள் அவசியம் - டக்ளஸ் தேவானந்தா சுகா...
ஆட்சி மாற்றம் உருவானதும் தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ...
அநுராதபுரத்தில் பெண் வைத்தியருக்கு ஏற்பட்ட கொடூரம் போன்று மீண்டும் நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும...