ஆட்சி மாற்றம் உருவானதும் தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு – டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Wednesday, October 30th, 2019

ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச வெற்றிபெற்று ஆட்சி மாற்றம் உருவானது தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சின ைகளுக்கு நிரந்தர தீர்வுபெற்றுத்தருவேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேச ஆலோசனை சபை உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் இப்பகுதியின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதார தேவைப்படுகளில் அதிக பங்களிப்பை மேற்கொண்டிருந்தோம்.

ஆனாலும் அது இன்னமும் முழுமையாக நிறைவுசெய்யப்படாத நிலை காணப்படுகின்றது.

நாம் முன்னெடுத்த பணிகளை தொடர்ந்து செல்வதற்கு தற்போது சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அந்தவகையில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரிக்க கோரும் கோட்டபய ராஜபக்ச அவர்களது வெற்றியில் நீங்களும் பங்காளர்களாக வேண்டும் என்பதே எமது கோரிக்கைதாகும்.அதனூடாக இப்பகுதியின் அனைத்து தேவைப்பாடுகளுக்கும் நாம் தீர்வுகளை கண்டுதருவோம். செய்வோம் செய்விப்போம் என்றார்.

Related posts:

தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் ட...
வெளிவாரி பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்பி வலியுறுத்து!
உடற்கல்வி ஆசிரியர்கள் தமது ஆசிரியர் பயிற்சிகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள முடியும் – அமைச்சர் டக்ளஸ் ...

வடக்கில் பாடசாலைகள் புனரமைப்பிற்கு இந்திய உதவி வரவேற்கத்தக்கது! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவான...
ஆலயத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும் - திருக்கோணேஸ்வரத்தில் அமைச்சர் டக்...
போட்டி போட்டு சாரதித்துவம் செய்யும் அரச மற்றும் தனியார் பேருந்துகளால் அதிக ஆபத்து - குறித்த தரப்பின...