பெண்ணின் சங்கிலி அறுத்தமை தொடர்பில் இருவர் கைது!
Tuesday, November 22nd, 2016
நவக்கிரி, ஈவினை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வீதியால் சென்ற பெண்ணின் 2பவுண் தங்கச் சங்கிலி அறுத்தெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை அன்றையதினம் இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். கைதான இரு இளைஞர்களும் நெல்லியடி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியால் சென்ற குறித்த பெண்ணை இடைநடுவில் மறித்து கதை கேட்ட இளைஞர்கள், கைபையை பறித்து அதில் இருந்த 1,000ரூபாய் பணம் மற்றும் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்துக் கொண்டு தப்பியோடினர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்தார். விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகத்தில் இருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளார்கள்.

Related posts:
மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க யோசனை - அமைச்சர் மஹிந்த மரவீர தெரிவிப்பு!
திருகோணமலை எண்ணெய் குதங்கள் விரைவில் இலங்கை வசமாகும் - அமைச்சர் கம்மன்பில அறிவிப்பு!
ஓய்வூதியர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவி...
|
|
|


