யாழ்.குடாநாட்டில் சனியன்றிரவு அதிகூடிய மழை வீழ்ச்சி!
Monday, November 21st, 2016
நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை வீழ்ச்சி கிடைத்தது. வளிமண்டலவியல் திணைக்களத் தகவலில், நேற்று முன்தினம் இரவு 8.30மணியில் இருந்து நேற்றுக்காலை 8.30மணிவரை 97.7மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியது. இதவரை கிடைத்த வாசிப்பில் யாழ்.மாவட்டத்தில் கிடைத்த அதிகூடிய மழைவீழ்ச்சி இதுவாகும். நேற்றுக்காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30மணிவரை 5.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியது.
நயினாதீவில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் நேற்றுக்காலை 8.30மணிவரை 104 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெறப்பட்டது. நடப்பு ஆண்டில் ஒரே தினத்தில் இலங்கையில் பெற்ற அதிகூடிய மழைவீழ்ச்சி இதுவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

Related posts:
அறுவடை இடம்பெறும் விவசாய நிலங்களுக்குச் சென்று நெல் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாளைமுதல் ...
மேலும் 500,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி நன்கொடை - சீனத் தூதரகம் உறுதி!
நாளை தீர்மானமிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம் - இன்றும் பல சந்திப்புகள் !
|
|
|


