ஹெரோயினுடன் 4 வெளிநாட்டு பிரஜைகள் கைது!
Monday, November 21st, 2016
இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் 4 பேர் கல்கிஸ்ஸை ரயில் நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் கமல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
நீண்ட நாளாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளினூடாக உறுதிப்படுத்தப்பட்ட தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.மாலைத்தீவைச் சேர்ந்த மூன்று பேரும் பாகிஸ்தான் பிரஜை ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts:
முன்னாள் பிரதமர் வைத்தியசாலையில் !
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவரின் முழுக் குடும்பத்தினருக்கும் கொரோனா!
உணவுப் பாதுகாப்பையும் - போஷாக்கையும் உறுதி செய்து தன்னிறைவடைவோம் - தைப்பொங்கல் வாழ்த்து ஜனாதிபதி ரணி...
|
|
|


