மாணவர்களே எச்சரிக்கை! உற்று நோக்குகின்றது சட்டம்!
Friday, November 11th, 2016
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான வாசிப்பு நேற்றையதினம்(10) நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
நாட்டில் தற்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் இடம் பெற்றுவரும் பகுடிவதைகள் ஏராளம். இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டங்களை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
இவ்வாறான செயல்களை தடுக்கும் நோக்கில்,பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பகிடிவதை குறித்து அறிவிப்பதற்கு புதிய நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் இதற்காக ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts:
நீர்க் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படும்
மாகாண சபைத் தேர்தலை எந்நேரத்திலும் நடத்த தயார் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவிப்பு!
பயிற்றுவிக்கப்பட்ட தொழிற்றுறைகளைச் சார்ந்தோரை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் பணி ஆரம்பம்!
|
|
|


