இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளராக சரத் ஜெயமான்னே நியமனம்!
Friday, November 11th, 2016
இலங்கையின் இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி சட்டத்தரணி, சரத் ஜெயமான்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் இன்று மாலை ஜனாதிபதியினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.சரத் ஜெயமான்னே சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆறாவது சிரேஸ்ட உறுப்பினராவார்.
ஏற்கனவே இந்தப்பதவியில் இருந்து தில்ருக்சி விக்கிரமசிங்க கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதியன்று பதவிவிலகியமையை அடுத்தே ஜெயமான்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts:
தகவலறியும் சட்டமும் கணக்காய்வு சட்டமும் அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்திய சட்டங்கள் - ஜனாதிபதி!
ஜனவரிமுதல் காகிதமல்லா மின்பட்டியல் பற்றுச்சீட்டு - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
இலங்கை ரூபாய் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாற்றம்!
|
|
|


