புலம்பெயர் தமிழர் கருத்தை நாடும் பேரவை!
Tuesday, March 8th, 2016
புலம்பெயர் தமிழர்கள் தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பான தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை கேட்டுள்ளது.
அவர்கள் மேலும் தெரிவித்தள்ளதாவது –
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றதும், இதில் மக்கள் மிகவும் உட்சாகத்துடன் பங்குபற்றுவதும் மிகவும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கின்றது. ஈழத்தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் புலம்பெயர்ந்துள்ள எங்கள் உறவுகளின் வகிபங்கு மிகவும் அவசியமானது. எனவே, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில், புலம்பெயர் தமிழ் உறவுகள் தங்களின் கருத்துக்களை தனிப்பட்ட முறையிலோ அல்லது அமைப்பு ரீதியாகவோ பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது..
Related posts:
கிணற்றில் விழுந்து சிறுவன் பலி : பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் சம்பவம்!
சாட்டிக் கடற்கரைப் பகுதியில் மிகவும் அரிதான கடல் பன்றி உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியது!
ஐ.நா விவகாரத்தை நாட்டின் தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் - அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அமைச்சர் ஜ...
|
|
|


