மத்திய வங்கியின் நிதிச்சபை கூட்டம் இன்று!
Friday, November 4th, 2016
மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் டிதாடர்பான கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக மத்திய வங்கியின் நிதிச்சபை கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமார சுவாமி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த வாரம் கோப் குழுவின் அறிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அறிக்கையில் மத்தியவங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அறிக்கை தொடர்பான அடுத்தக்கட்ட செயற்பாடு குறித்த இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடபபட்டு நிதி சபை தீர்மானிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
குறைந்தளவான விளைச்சல் கிடைக்கப்பெறும் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு - விவசாய அமைச்சர் மகிந்தானந்...
இன்று இரவுமுதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் - எரிசக்தி அமைச்சு அறிவிப்...
தொல்பொருள் வரலாற்று சின்னங்களாக ஏழு சிவாலயங்கள் அடையாளம் - வரலாற்றை ஆராய்ந்து பாதுகாக்கவும் அரசு நடவ...
|
|
|


