புற்றுநோயாளர்களுக்கு எலும்பு மச்சை பொருத்தும் சத்திர சிகிச்சை!
Friday, October 28th, 2016
அவுஸ்திரேலியாவின் வின்சன் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பேராசிரியர் எம்.ஏ.டேவிட்டின் பணிப்புரைக்கு அமைய மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு எலும்பு மச்சை பொருத்தும் சத்திர சிகிச்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எலும்பு மச்சை பொருத்தும் சத்திர சிகிச்சை இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். மஹரகம வைத்தியசாலையில் எலும்பு மச்சை சத்திர சிகிச்சைக்காக தற்சமயம் நூற்றுக்கும் அதிகமான நோயாளர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.. சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளில் இந்த சத்திர சிகிச்சைக்காக 3 கோடி ரூபாவிற்கும் நான்கு கோடி ரூபாவிற்கும் இடைப்பட்ட நிதியை செலவிட வேண்டும்

Related posts:
தொண்டர் ஆசிரியர் 445 பேருக்கு நிரந்தர நியமனம்!
மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது
நீதித்துறைக்கு 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு - நீதி அமைச்சர் தெரிவிப்பு!
|
|
|


