தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுடன் பேரம் மட்டுமே – அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ!
Sunday, October 16th, 2016
பெய்ஜிங்கிற்கு அடுத்த வாரம் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ அரசுப்பயணம் மேற்கொள்ள நிலையில், தென் சீனக்கடல் மீதான நாட்டின் நலனில் பேரம் பேசப்போவதில்லை என்றும், சமரசம் செய்யப்போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், தென் சீனக்கடலின் பெரும்பான்மையான வளங்களுக்கு சீனா உரிமை கோரி இருந்ததை சர்வதேச தீர்ப்பாயம் ஒரு தீர்ப்பின் மூலம் அதனை தள்ளுபடி செய்தது குறித்து விவாதிக்கப்படும் என்றும், ஆனால் அது குறித்து கடினமான அழுத்தங்கள் இருக்காது என்றும் டுடெர்டோ தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங் உடன் நெருக்கமான உறவை வைத்து கொள்ள அதிபரின் விரைவான நகர்வுகள் மணிலா உடனான கடல்வழி இறையாண்மையை பாதிக்கும் என்று பிலிப்பைன்ஸில் கவலைகள் எழுந்துள்ளன.

Related posts:
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் துருக்கிக்கு விஜயம்!
ஹகிபிஸ் புயல் : வெள்ளத்தில் மூழ்கிய புல்லட் ரயில்கள்!
உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் பேச்சுக்கு உதவத் தயார் - பிரதமர் மோடி அறிவிப்பு!
|
|
|


