இலங்கையின் சிறந்த அரச நிறுவனமாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவு!
Wednesday, October 12th, 2016
கோப் குழுவினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கடந்த ஒரு தசாப்த காலத்தில் மக்களுக்கு காத்திரமான சேவைகளை வழங்கிய நிறுவனமாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் 38 தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இதில் மகளுக்கு மிகவும் சிறந்த முறையில் சேவையாற்றிய நிறுவனமாக பரீட்சைகள் திணைக்களம் கருதப்படுகின்றது.
பரீட்சைகள் திணைக்களத்தின் செயற்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஏனைய நிறுவனங்களை விடவும் சிறந்தமுறையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுங்கத் திணைக்களம், கலால் திணைக்களம் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டித் தரக்கூடிய நிறுவனங்களை விடவும் பரீட்சைகள் திணைக்களம் சிறந்த சேவைகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:
திங்கள்முதல் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்திருந்த பயணத்தடையை நீக்குகிறது பிலிப்பைன்ஸ் !
பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் - பாடப் புத்த...
தேர்தல் வாக்களிப்புக்கு அவசியமான அழியாத மை உள்ளிட்ட ஆவண பொருட்களை கொள்வனவு செய்ய தேர்தல்கள் ஆணைக்க...
|
|
|


