யாழ். மாநகர சபையின் எல்லைக் குட்பட்ட பகுதியில் வீதிப் புனரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்படும்!
Thursday, October 6th, 2016
யாழ். மாநகர சபையின் எல்லைக் குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வீதிப் புனரமைப்புப் பணிகள் யாவும் எதிர்வரும் மழை காலத்திற்கு முன்னர் துரிதப்படுத்தப்படும் என யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.
சில வீதிகள் சேதப்படுத்தப்பட்டும் உள்ள நிலையில் வீதிப் புனரமைப்பிற்குக் கோரிக்கை விடுக்கப்பட்ட வீதிகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றன. இவ் வீதிகளையும் விரைவாகப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டிற்குள் குறித்த வீதிகள் புனரமைக்கப்படும் என ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
கோர விபத்து:மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞன்!
சவாலான நேரத்தில் இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க ஐக்கிய அமெரிக்கா தனது கரங்களை நீட்டியுள்ளது - அமெரிக...
கடந்த ஆண்டு இலங்கைக்கு மில்லியன் டொலருக்கும் அதிகமான புதிய உதவிகளை அமெரிக்கா வழங்கியதாக இலங்கைக்கான ...
|
|
|


