வெப்பத்துன் கூடிய காலநிலை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்! – காலநிலை மத்திய நிலையம்
Monday, March 7th, 2016
தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை இந்த மாதம் 15ம் திகதி வரை நீடிக்கும் என காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது
தற்போது காணப்படும் வரட்சியான காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் என்று பதிவாகியுள்ளதாக காலநிலை மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது
அத்துடன் மட்டக்களப்பு, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, திருகோணமலை மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களில் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், நுவரெலிய மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலையாக 22 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது
Related posts:
ஆர்ப்பாட்டங்களில் அப்பாவி மாணவர்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே பங்கு கொள்கின்றனர்!
இஸ்லாமிய மக்களின் புனித நோன்பு பெருநாள் இன்று!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியாகின்றது வர்த்த...
|
|
|


