மின்சாரக் கட்டணத்தை உயர்த்துமாறு கோரிக்கை!
Monday, October 3rd, 2016
அனைத்து துறைகளிலும் கட்டண அதிகரிப்பை கோரி மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கு 5 வீதத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி யினால் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமார சிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தள்ளனர்.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து எதிர்வரும் வருடம் மார்ச் 31ம் திகதி வரை இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பை கோரியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.எவ்வாறாயினும்,தற்போதைய நிலையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பாரிய தேவைப்பாடு காணப்படுவதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்திருந்தார்

Related posts:
சட்டவிரோதமான முறையில் தண்ணீர் பெறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ ந...
170,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனை - மத்திய வங்கி...
வடக்கில் 2,500 மாணவர்கள் இம்முறை ஓ.எல். பரீட்சையில் சித்தியடைய வாய்ப்பிலையாம் - ஆளுநர்!
|
|
|


