170,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனை – மத்திய வங்கி அறிவிப்பு!
Sunday, July 28th, 2024
170,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜனவரிமுதல் இதுவரை 400 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் - 17.5 சதவீதமானோரே வெளிநாடு சென்றுள்ளனர் எ...
சீனாவிடம் இருந்து இலங்கைக்கு பல பில்லியன் உதவி கிடைக்கும் – பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக சீனாவ...
இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் தரங்கினி இலங்கையில்!
|
|
|


