விரைவில் எண்ணெய் விலை உயரும்?
Friday, September 30th, 2016
உலக சந்தையில் எண்ணெயின் விலை விரைவில் உயர்வடையும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மசகு எண்ணெய் உற்பத்தியை நூற்றுக்கு 8 சதவீதமாக குறைப்பதற்கு, ஒபேக் அமைப்பு தீர்மானித்துள்ளமையாலேயே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு தீர்மானத்தை, 8 வருடங்களின் பின்னரே, ஒபேக் அமைப்பு எடுத்துள்ளது. இதனால், உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 5 சதவீதத்தால் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
தற்போது உற்பத்தி செய்யப்படும் மசகு எண்ணெயில் சுமார் 2 மில்லியன் பரல்கள் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள, ஒபேக் அமைப்புத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை
கிளி - முல்லை வழித்தட அனுமதி வழங்கப்படவில்லையென முறைப்பாடு!
நீர்ப்பாசன சுபீட்சம் திட்டத்தின் வட மத்திய மாகாண கால்வாய் அபிவிருத்தி செயற்றிட்டம் ஜனாதிபதி தலைமையில...
|
|
|


