தொற்றா நோயினை இல்லாதொழித்தல் சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி!
Friday, September 23rd, 2016
உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த, தொற்றா நோயினை முற்றாக இல்லாதொழித்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றுள்ளார்.
“நிலையான அபிவிருத்தியின் குறிக்கோளை அடையும் நோக்கத்துக்காக சுகாதார சேவையின் இலக்குகளுக்கு பங்களித்தல்” எனும் தலைப்பில் இடம்பெற்று வரும் இம்மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி அவர்கள் கலந்து கொண்டதனை வரவேற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் மாகிரட் சான், இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் என்றவகையில், இலங்கையில் சுகாதார சேவைகளை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட அர்ப்பணிப்பு தொடர்பில் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

Related posts:
அதிகபட்ச பொதுமக்கள் சேவைக்காக செயற்படும் - மக்கள் வங்கி, இலங்கை வங்கித் தலைவர்கள்!
வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை நாடு திரும்பியுனார் ஜனாதிபதி ரணில் விக்கிர...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் முன்னாள் MPக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்த முடியாது - நாடாளு...
|
|
|


