சிறுபோக பருவ நெல் கொள்முதல் – நெல் ஆலைகள் நிதியுதவி குறித்து அறிவிப்பு!
Thursday, August 20th, 2026
….
2026 சிறுபோக பருவத்தில் விரைவுபடுத்தப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சிறு, நடுத்தர மற்றும் கூட்டுறவு நெல் ஆலை உரிமையாளர்கள் வட்டி இல்லா சலுகை நிதியுதவியைப் பெற மாவட்ட செயலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக 25 மெட்ரிக் டன் அரைக்கும் திறன் கொண்ட சிறு, நடுத்தர அளவிலான நெல் ஆலைகள் மற்றும் கூட்டுறவு நெல் ஆலைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதியானவை ஆகும்.
தகுதிபெறும் ஆலைகளுக்கு அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரையிலான வட்டி இல்லா சலுகை நிதியுதவி பெறமுடியும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
00
Related posts:
கடுமையான வெப்பநிலை 25 ஆம் திகதி வரை நீடிக்கும்!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - 6.4 பில்.டொலரை நட்ட ஈடாக பெற அரசாங்கம் நடவடிக்கை!
புத்தாண்டு பாடல் திரிபுபடுத்தப்பட்டிருப்பது குறித்து விசாரணை - கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை!
|
|
|


