அந்நியச் செலாவணி கையிருப்பை 15 பில்லியன் டாலர்களாக உயர்த்தத் தவறினால் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடி – ரணில் ஆரூடம்!
Wednesday, August 19th, 2026
…..
2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பை 15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தத் தவறினால், நாடு மீண்டும் ஒரு பாரதூரமான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், 2028க்குப் பிறகு வெளிநாட்டுப் கடன்களை மீண்டும் செலுத்தத் தொடங்கும்போது எழும் இந்தச் சவாலை நாட்டின் “மூன்றாவது போர்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், இப்போரில் வெற்றிபெறத் தவறினால் நாடு மீண்டும் மீளமுடியாத பெரும் கடன் சிக்கலில் அகப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
000
Related posts:
மத்தியஸ்தர் சபையில் உள்ளோருக்கு வெளிநாடுகளில் பயிற்சி !
இலங்கையின் நிதிக் கொள்கையின் ஸ்திரத்தன்மை காலத்திற்கு பொருத்தமானது - மத்திய வங்கி!
ஜுன் மாதம் முதல் மாவட்ட செயலகங்களூடாக கடவுச்சீட்டினை வழங்க நடவடிக்கை!
|
|
|


