மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம்!
Thursday, March 28th, 2019
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்காக நிலவிய குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்து இருந்ததுடன் அதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபை கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தது.
அதனடிப்படையில் அவர் இன்று (28) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
Related posts:
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அபிவிருத்தியை நிலைநிறுத்துவது தொடர்பில் நிதி அமைச்சர் ...
ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 341 பேர் உயிரிழப்பு!
இலங்கை 129 ஆவது இடம் - பின்லாந்துக்கு முதலிடம்!
|
|
|


