வளிமண்டலக் காற்று மாசு – இலங்கையில் வருடாந்தம்  7,000 மரணங்கள் –  சுகாதாரப் பிரிவினர் தகவல்!

Thursday, August 6th, 2026


……
வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

காற்றிலுள்ள பல்வேறு தீங்கிழைக்கும் நுண் துகள்களே இதற்குக் காரணம் என விசேட ய நிபுணர் சாந்தனி விதான சுட்டிக்காட்டியுள்ளார்.

காற்று மாசுபாடு காரணமாக உலகளவில் ஆண்டுக்கு 7 மில்லியன் முதல் 8 மில்லியன் மக்கள் வரை உயிரிழப்பதுடன், இலங்கையிலும் இக்காரணத்தால் ஆண்டுக்கு 7,000 பேர் வரை அகால மரணமடைகின்றனர்.

விறகுகளை எரிப்பதன் மூலமும் பெருமளவிலான நச்சு வாயுக்கள் சுற்றாடலில் வெளிவிடப்பட்டு வளிமண்டலம் மாசடைவதாக மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் (Health Promotion Bureau) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மருத்துவர் சாந்தனி விதான இத்தகவல்களை வெளியிட்டார். 

000

Related posts:

அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா – ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு மீ...
நல்ல முட்டையிடும் கோழியைக் கொன்று சாப்பிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை - இராஜாங்க அமைச்சர் திலும்...
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல் ஆரம்பம்!