ஊடகர் ஜெரிசனின் சகோதரனது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!

Tuesday, July 28th, 2026

ஊடகர் ஜெரிசனின் சகோதரனது
பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.

அமரர் சந்திரன் டரிசன் மாரடைப்பு காரணமாக தனது 26 ஆவது வயதில் இன்றையதினம் (28) காலமானார்.

இன்நிலையில் அமரரது பூதவுடல், யாழ்ப்பாணம் சிராம்பியடியில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(28) அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து தனது அஞ்சலியை செலுத்தியதுடன் குடும்ப உதவுகளுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும்  தெரிவித்திருந்தார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், சிரேஸ்ட முக்கியஸ்தர் கமலேந்திரன் கந்தசாமி, ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த், கட்சியின்  தோழர்கள் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டு  அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


000

Related posts: