நிர்ணய விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை – 10 இலட்சம் அபராதம்!
Tuesday, July 28th, 2026
…
பண்டாரவளை பிரதேசத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு - ஐரோப்பிய ஒன்றியம்!
200 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சவுதி அரேபிய சிறையில்!
பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் வடக்கு மற்றும் கிழக்கில் சிக்கல் - மகிந்த தேசப்பிரிய !
|
|
|


