நிர்ணய விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை – 10 இலட்சம்  அபராதம்!

Tuesday, July 28th, 2026



பண்டாரவளை பிரதேசத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
000

Related posts:


இரண்டு அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!
வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தல் - பத்து இளைஞர்களை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீத...
தென்னிந்திய இசை கலைஞர்கள் பலர் கலந்துகொள்ளும் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வு யா...