O/L பரீட்சை விண்ணப்பம் – அடையாள அட்டை இல்லாத மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகை !
Wednesday, July 15th, 2026
…..
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரர்கள் , தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பரீட்சைக்குப் பதிவு செய்ய முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை, அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றுமாறு அதிபர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
000
Related posts:
வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக ஜன...
ஜனநாயகத்தை பாதுகாத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச உயர்ந்த இடத்தில் இருப்பார் - நாடாளுமன்ற உறுப்பினர்...
இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
|
|
|


