நீர்கொழும்பு சிறையில்  கலவரம் –   இருவர் உயிரிழப்பு!

Sunday, July 5th, 2026


….
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளிடையேயான மோதலால் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸின் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையில் கூரையில் ஏறியுள்ள பெண் கைதிகள் பலர் கூறியுள்ள தகவல்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
”டெங்கு பரவி இப்போது சுமார் 40 பேருக்கு தொற்றியுள்ளது.

மருந்து இல்லை. இரண்டு பெனடோல் மாத்திரைகள் மாத்திரமே தருகிறார்கள்.

இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

மோதலுக்கான காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

000

Related posts: