O/L  பரீட்சை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு – பரீட்சைத் திணைக்களம்!

Sunday, June 14th, 2026


….
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர.  (O/L) பரீட்சை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை முடிவுகள் ஆரம்பத்தில் ஜூன் 15 அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், முடிவுகளை இறுதி செய்யும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது பரீட்சை முடிவுகளைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இன்னும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என நம்புவதாகவும் பரீட்சைத் திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதேநேரம் இம்முறை (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்த பரீட்சைக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 451,463  மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: