கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீன்பிடியாளர் ஒருவர் நெடுந்தீவு மீனவரால் மீட்பு!
Saturday, May 23rd, 2026
……….
தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீன்டியாளர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் இராமேஸ்வரம் இராமனாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதே நேரம் இன்று (23) மாலை 4.30 மணியளவில் குறித்த மீன்பிடியாளர் நெடுந்தீவு மீனவர்களால் மீட்கப்பட்ட நிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நாளை (24) குறித்த தமிழக மீன்பிடியாளரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் நெடுந்தீவு பொலிசார்
தெரிவித்தனர்.
Related posts:
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளைப் பொலிஸார் அடாத்தாகக் கையகப்படுத்துகின்றனர்: யாழ். ...
உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது பலாபலனை மக்களுக்கு வழங்குவோம் - நிதியமைச்சர்!
செங்கடலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இலங்கையும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் – பா...
|
|
|


