உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது பலாபலனை மக்களுக்கு வழங்குவோம் – நிதியமைச்சர்!
Wednesday, September 12th, 2018
சர்வதேச அளவில் எரிபொருள் சம்பந்தமாக காணப்படுகின்ற நிலமைக்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாகவும், அந்நிலைமையில் மாற்றம் நிகழும் பட்சத்தில் உரிய நிவாரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச அளவில் எருபொருள் விலை அதிகரிக்கும் போது விலைச் சூத்திரத்திற்கு அமைவாக நாட்டிலும் எருபொருள் விலை அதிகரிக்கும் என்றும், சர்வதேசத்தில் விலை குறையும் போது அதன் பிரதிபலனையும் மக்களுக்கு வழங்குவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர...
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் விஜயம் – அந்நாட்டின் முக்கிய தலைவர்க...
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி - 14 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கடற்படையினர...
|
|
|


